"செருப்பை திண்கிறேன்" கவிதையில் சமூகப் பார்வை...!
சு. சிவனேஸ்வரன் MA., NET., தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை. முன்னுரை நம்முடைய நாட்டில் தன் பாலின ஈர்ப்பாளர்கள் சமுதாய சூழல்களை எதிர்கொள்வது என்பது அன்றாடம் புதிய அனுபவங்களாக தான் அமைகின்றது. பொது இடத்தில் மதிப்பின்மை, நண்பர்களிடத்தில் தகாத பேச்சு, ஒதுக்கி வைத்தல், தகாத வார்த்தைகளால் புண்படுத்துதல் சமூக ஊடகங்களினுடைய தாக்கம், சமூகத்தில் அக்கறை கொள்ளாத மனிதர்கள் என ஏராளமான காரணங்களால் மனதாலும் உடலாலும் பாதிக்கப்படுகின்றனர். எத்தனையோ பாதிப்புகள் உண்டான போதிலும் இச்சமுதாயத்துக்குத் தேவையான ஒரு இலக்கியமாவது படைக்க வேண்டும் என்று தமிழ் இலக்கிய சமுதாயத்திற்கு சில ஊன்றுகோல்களை நிறுத்தி வைக்கின்றார்கள் எழுத்தாளர்கள். திருநங்கைகள் மற்றும் தன் பாலின ஈர்ப்பாளர்களைப் பற்றி மட்டுமே எழுதினால் என்ன? அவையும் எழுத்துக்கள் தான் என்பதனை மக்கள் தான் புரிந்து கொள்வதில்லை. புகழ்பெற்ற எழுத்தாளர்கள், பிரியா பாபு நர்த்தகி நடராஜ் (நடனம்) தனுஜா நேகா மரக்கா அழகு ஜெகன் அருண் கார்த்திக் அக்னி பிரதீப் ( இன்னும் தொடரும்….) போன்ற கவிஞர்கள் இலக்கிய சமுதாயத்தில் பெரும்பங்காற்ற